குறள் 331
குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை மு.வ உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும். சாலமன் பாப்பையா உரை: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது. கலைஞர் உரை: நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.